தேனி மாவட்டம், போடி அருகே உழைப்பாளர் தினத்தை கொண்டாடும் வகையில், தூய்மை பணியாளர்களுக்கு இலவச இன்ப சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் மே 1-ம் தேதி உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி போடிநாயக்கனூர் மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு இலவச இன்பச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி தூய்மைப் பணியாளர்கள் அனைவரும், திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இரண்டு நாட்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.