அரியலூரில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வலம்வந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தேவனூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வாகன பதிவெண் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த மர்ம நபரை போலீசார் நிறுத்த முயன்றனர்.
இந்நிலையில் போலீசாரை கண்டதும், இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு மர்ம நபர் தப்பியோடினார்.
அப்போது அவரின் வாகனத்தில் நாட்டுத் துப்பாக்கி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.