சென்னையில் சில பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் மாநகரின் சில பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், கோடையின் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்பித்துக்கொள்ள சென்னையில் சில பகுதிகளில் இன்று திடீர் மழை பெய்தது.
அதன்படி, கோடம்பாக்கம் , சூளைமேடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சிறிது நேரம் லேசான மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.