திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன.
அரங்கல்துருகம் பகுதியில் துரைமுருகன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கோழி பண்ணையில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 10 லட்சம் மதிப்புள்ளான கோழிகள் மற்றும் தீவன பொருட்கள் எரிந்து கருகின.