நாடாளுமன்ற தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் 64.4 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதியும், 2-வது கட்ட தேர்தல் 26-ந் தேதியும் நடைபெற்றது. இரு கட்டங்களிலும் 190 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மூன்றாவது கட்டமாக 93 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் 64 புள்ளி 4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அசாமில் அதிகபட்சமாக 81.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மிகக்குறைந்த அளவாக 57.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது..அங்கு 10 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.