பழனி அருகே கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் வேன் மூலம் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். பழனி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த 10- க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.