ஆபத்து விளைவிக்கும் செல்லப் பிராணிகளை கட்டுப்பாடின்றி திரியவிட்டால், அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. மேலும், மாநகராட்சியின் உரிமம் பெற்ற நாய்கள் மட்டுமே பூங்காக்களுக்குள் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரெனப் பாயும் தன்மை கொண்ட நாய்களை முகமூடியின்றி வெளியே கொண்டு செல்லக் கூடாது எனவும்,
இத்தகைய நாய்களின் உரிமையாளர்கள் குறித்து புகார் இருந்தால், ஒன்று ஒன்பது ஒன்று மூன்று என்ற தொலைபேசி எண்ணில் புகாரளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் உரிமம் பெற்றிருப்பதோடு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே பூங்காக்களுக்குள் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஆபத்து விளைவிக்கும் செல்லப் பிராணிகளை பொது இடங்களில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.