சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பெய்த மழையால், மக்களுக்கு கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து சிறிது விடுதலை கிடைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில், தினசரி 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பநிலை பதிவாகி வந்தது.
இதனால் மதிய நேரங்களில் வெளியே வராமல் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். இந்நிலையில், சென்னையில் அதிகாலையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, நந்தனம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
மேலும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இந்த மழையால் 3 மாதங்களுக்கும் மேலாக வாட்டி வதைத்த வெயிலில் இருந்து சிறிது தளர்வு கிடைத்துள்ளதாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.