ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், மாநில ஊரக வளர்ச்சி அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் உதவியாளர் வீட்டு வேலைக்காரரின் வீட்டில் இருந்து 25 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றினர்.
ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளர் வீரேந்திர கே. ராம் என்பவர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பாக சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சருடைய உதவியாளரின் பணியாளர் வீட்டிலிருந்து, 25 கோடி ரூபாயைக் கைப்பற்றி, மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்த காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.