ராமநாதபுரத்தில் தானாக இயங்கிய அரசுப் பேருந்து வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் வீட்டிலிருந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ராமேஷ்வரத்தில் அரசுப் பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் பணிமனைக்கு சென்றுள்ளார். அப்போது பேருந்தின் பிரேக் செயல்படாததால் தானாக இயங்கிய அரசுப் பேருந்து, 50 மீட்டர் தூரம் வரை சென்று வீட்டிற்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வீட்டிலிருந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அரசுப் பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.