திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மேம்பாலத்தில், அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.
கன்னிகாபுரம் பகுதியில் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் முழுமை பெறாத நிலையில், ஒரு பகுதியில் மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பத்தூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பேருந்து, மேம்பாலத்தின் மீது இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், 5 பேர் காயமடைந்தனர். 30 -க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.