தேனியில், நாட்டு வெடிகுண்டு, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் அடுத்த ஜெயமங்கலத்தில் போலீசார் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெரியகுளம் நோக்கி சென்ற ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய போலீசார், சூரிய பிரகாஷ், வீரனேஸ்வரன், பிரகதீஷ், பிரபு ஆகிய 4 பேரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.