மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் சூழலில் உள்ள நிலையில், அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை அணி பந்துவீச்சுக்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்ட காரணத்தால் ஹர்திக் பாண்டியாவுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஐ.பி.எல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பிற மும்பை வீரர்களுக்கு தலா 6 லட்சம் அல்லது போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.