மிக உயர்ந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையில் உள்நாட்டிலேயே இலகுரக குண்டு துளைக்காத ஜாக்கெட்டை வெற்றிகரமாக உருவாக்கி, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அசத்தியுள்ளது.
இலகுரக குண்டு துளைக்காத ஜாக்கெட் குறித்த அறிக்கை ஒன்றை டி.ஆர்.டி.ஓ வெளியிட்டுள்ளது. அதில் பாலிமர் மற்றும் மோனோலிதிக் செராமிக் பிளேட்டால் ஆன புதிய வடிவமைப்பைக் கொண்ட இலகுரக குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜாக்கெட் ஸ்னைப்பர் துப்பாக்கி குண்டுகள் மூலம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.