அசாம் ரைபிள்ஸ் படைக்கு எழுச்சி நாள் வாழ்த்துகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அசாம் ரைபிள்ஸ் படையின் எழுச்சி நாளான இன்று அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது X பதிவில்,
“அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எழுச்சி நாள் வாழ்த்துக்கள்.
Greetings to the personnel of Assam Rifles and their family members on their raising day.
The ever-vigilant and victorious force has stood as a bulwark guarding the nation's internal security in the Northeast and securing the people. Salute to the lion-heart soldiers who laid… pic.twitter.com/cOa5Fn2T8t
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 24, 2024
எப்பொழுதும் விழிப்புடனும் வெற்றியுடனும் நிற்கும் படை, வடகிழக்கில் தேசத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பைக் காத்து மக்களைப் பாதுகாக்கும் அரணாக நிற்கிறது. தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த உறுதியான மனம் பெற்ற வீரர்களுக்கு வீர வணக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.