நாடு முழுவதும் 88 தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தலில் 63.50 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மராட்டியம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு நேற்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
இதில், 63 புள்ளி 50 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக திரிபுராவில் அதிகபட்சமாக 79 புள்ளி 46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக உத்தரபிரதேசத்தில் 54 புள்ளி 85 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது.