சீனா நாட்டு கப்பல் மாலுமி மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணுார் காமராஜர் துறைமுகத்திற்கு சீன கப்பல் ஒன்று நிலக்கரி ஏற்றிக்கொண்டு வந்தது.
அப்போது கப்பலின் நிர்வாக பிரிவில் பணியாற்றி வந்த கோங் யூவூ என்ற நபரை காணவில்லை என புகார் எழுந்தது.
இதனையடுத்து கப்பலின் பராமரிப்பு பிரிவின் ஒரு பகுதியில், காணாமல் போன கோங் யூவூ இறந்து கிடப்பதை சக மாலுமிகள் கண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மீன்சூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.