கேரளாவிலிருந்து மீன் கழிவுகளை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்குள் நுழைந்த வாகனத்திற்கு 1 லட்ச ரூபாய அபராதம் விதிக்கப்பட்டது.
கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் , மீன்கழிவுகள், மருத்துவ கழிவுகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி செல்வதாக கூறப்படும் நிலையில், கோழிக்கோடு பகுதிகளிலிருந்து மீன்கழிவுகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக பதிவெண் கொண்ட லாரி ஒன்று குழித்துறை பகுதிக்கு வந்துக்கொண்டிருந்தது.
இதைக்கண்ட நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் லாரியை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து குப்பை குடோன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த லாரிக்கு நகராட்சி நிர்வாகம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து கேராளாவுக்கு திருப்பி அனுப்பியது.