தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே செண்பகாதேவி அம்மனுக்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
குற்றால அருவியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள செண்பகா தேவி அருவிக்கு அருகில், செண்பகாதேவி அம்மன் கோவில் ஒன்று உள்ளது.
இக்கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வான மஞ்சள் தீர்த்தவாரி நிகழ்ச்சி வனத்துறையினரின் பாதுகாப்புடன் நடைபெற்றது.
அருவியில் மஞ்சள் நிறமாக விழுந்த தண்ணீரில் செண்பகாதேவி அம்மனுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.