நீலகிரியில் ஆ. ராசா தோற்பது உறுதி என்பதால் அரசியலுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை சிந்திக்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பிரதமர் நரேந்திர மோடிவி மீது வினோதமான அறிக்கைகளை வெளியிட்ட ஊழல் சாம்பியனும், ‘2ஜி புகழ்’ ஆ. ராசா, ஊழல்வாதிகள் எவ்வளவு பயப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் அச்சம் பன்மடங்கு அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Corruption Champion and ‘2G Stalwart’ making bizarre statements on Hon PM Thiru @narendramodi avl shows how scared the corrupt are. Their fear will increase manifold once NDA returns to power.
Thiru A. Raja should think of life outside politics because his defeat in Nilgiris is… https://t.co/WPJR3cqLva
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 9, 2024
நீலகிரியில் தோல்வி தவிர்க்க முடியாதது என்பதால் ஆ. ராசா, அரசியலுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை சிந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.