கோடை கால விடுமுறையை முன்னிட்டு, சென்னை – நாகை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோடை கால விடுமுறையில் கூட்ட நெரிசலை சமாளிக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சென்னை – நாகை இடையே, வாரம் மும்முறை வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை – நாகை வந்தே பாரத் சிறப்பு ரயில் (வண்டி எண் – 06057) சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 28 வரை வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் காலை 05.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறு மார்க்கத்தில் நாகை – சென்னை வந்தே பாரத் வாரம் சிறப்பு ரயில் (வண்டி எண் – 06058) குறிப்பிடப்பட்ட அதே வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், மதியம் 02.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.