ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட சிக்கல் !
Monday, December 11 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட சிக்கல் !

Web Desk by Web Desk
Nov 2, 2023, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் இரு நட்சத்திர ஆல்ரவுண்டர்கள் களமிறங்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளுக்கான ஓட்டத்தில் 3 மற்றும் 4 ஆகிய இடங்களுக்காக 4 அணிகள் தீவிரமாக போட்டியில் உள்ளன.

அதில் ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நவம்பர் 4 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணி நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பெறவில்லை என்றால், அந்த அணிக்கான அரையிறுதி வாய்ப்பில் சிக்கல் ஏற்படும். இதற்கான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் சொந்த காரணங்களுக்காக திடீரென நாடு திரும்புகிறார். இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் மிட்செல் மார்ஷ் விளையாட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

அதேபோல் மிட்செல் மார்ஷ் எப்போது மீண்டும் இந்தியா திரும்புவார் என்பது குறித்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. டிராவிஸ் ஹெட் வந்த பின் 3 வது இடத்திற்கு மிட்செல் மார்ஷ் கொண்டு செல்லப்பட்டார்.

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் எந்த அணிக்கும் எளிதாக சவால் அளிக்கும் வகையில் மிரட்டலாக அமைந்தது.

இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோல்ப் விளையாடிய போது ஏற்பட்ட விபத்து காரணமாக மேக்ஸ்வெல் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் மிட்செல் மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்க முடியாதது அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் ஆடம் ஜாம்பாவிற்கு பின் இரண்டாவது ஸ்பின்னராக மேக்ஸ்வெல் தான் செயல்பட்டு வருகிறார். அதேபோல் பினிஷராக மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார். இவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்களாக ஆஸ்திரேலிய அணி யாரை பிளேயிங் லெவனில் சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags: Australiaaustralia vs england
ShareTweetSendShare
Previous Post

தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து வீரர்!

Next Post

 தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஸ்டார்ட் – அப் பிரிவு!

Related News

உலகக்கோப்பை மீது கால் வைத்தது குறித்து மிச்சேல் விளக்கம்!

உலகக்கோப்பை மீது கால் வைத்தது குறித்து மிச்சேல் விளக்கம்!

ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை  உதவியாக இருக்கும் – ரவி பிஷ்னோய் !

ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை  உதவியாக இருக்கும் – ரவி பிஷ்னோய் !

மின்கட்டண பாக்கி : இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி நடைபெறுவதில் சிக்கல்?

மின்கட்டண பாக்கி : இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி நடைபெறுவதில் சிக்கல்?

இந்திய அணியில் மாற்றங்கள் – சாதகமா, பாதகமா ?

இந்திய அணியில் மாற்றங்கள் – சாதகமா, பாதகமா ?

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 : தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 : தொடரை வெல்லுமா இந்தியா?

யுபிஐ மூலம் பணம் செலுத்திய ஆஸ்திரேலிய துணை பிரதமர்!

யுபிஐ மூலம் பணம் செலுத்திய ஆஸ்திரேலிய துணை பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை போக்குவரத்தில் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

சபரிமலை போக்குவரத்தில் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

பிறந்த நாளில் இறந்து போன பெண் – என்ன காரணம்?

பிறந்த நாளில் இறந்து போன பெண் – என்ன காரணம்?

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.950 கோடி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.950 கோடி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

தூதரகங்களுக்கு மெமோ அனுப்பிய விவகாரம் : இந்தியா மறுப்பு

தூதரகங்களுக்கு மெமோ அனுப்பிய விவகாரம் : இந்தியா மறுப்பு

மக்களவைத் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையம் தீவிரம்!

மக்களவைத் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையம் தீவிரம்!

காங்கிரஸ் எம்.பி. ஊழல்: நாடாளுமன்றம் முன்பு பா.ஜ.க. போராட்டம்!

காங்கிரஸ் எம்.பி. ஊழல்: நாடாளுமன்றம் முன்பு பா.ஜ.க. போராட்டம்!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது! – ஜெய்சங்கர்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது! – ஜெய்சங்கர்

இந்தியாவில் 55 தளங்களில் செயல்படும் 34 விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்! – வி.கே.சிங்

இந்தியாவில் 55 தளங்களில் செயல்படும் 34 விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்! – வி.கே.சிங்

ஜார்க்கண்ட் முதல்வருக்கு 6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

ஜார்க்கண்ட் முதல்வருக்கு 6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாராட்டுக்குரியது! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாராட்டுக்குரியது! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies