இந்திய ராணுவத்தின் முதல் மேஜர் ஜெனரலாக தமிழகப் பெண் பதவியேற்பு
Monday, December 11 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய ராணுவத்தின் முதல் மேஜர் ஜெனரலாக தமிழகப் பெண் பதவியேற்பு

Web Desk by Web Desk
Aug 4, 2023, 02:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராணுவ செவிலியர் சேவை பிரிவில் முதன்மை பதவியான மேஜர் ஜெனரல் பதவிக்குத் தமிழகத்தைச் சார்ந்த  இக்னேசியஸ் டெலோஸ் புளோரா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

முதல் பெண் மேஜர் ஜெனரல் இந்திய இராணுவ செவிலியர் சேவையில் தமிழகத்தில் இருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு பெற்றுள்ளார்.

5-1-1965-ம் ஆண்டு பிறந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர் வடக்கூர் ஆகும்.  இவருடைய தந்தை லூர்துசாமி பிள்ளை, தாய் தெரசம்மாள்.

இவருக்கு 3 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள். மூத்த சகோதரரான அந்தோணி சாமி 40 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2-வது சகோதரரான ஜாண் பிரிட்டோ எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 3-வது சகோதரர் ஜார்ஜ் ராஜாவும் ராணுவத்தில் பணியாற்றியவர். ஆனால் இவர் தற்போது உயிரோடு இல்லை. அன்னம்மாள், டெசி ஆகிய 2 சகோதரிகள் உள்ளனர்.

ஆரம்ப கல்வி

இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் ஆரம்பக்கல்வி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ராஜாவூர் புனித மிக்கேல் தொடக்கப்பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தோப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பை நாகர்கோவில் லிட்டில் பிளவர் பள்ளியிலும் படித்தார்.

பள்ளி படிப்பை முடித்தவுடன் மூத்த சகோதரரான அந்தோணி சாமியின் அறிவுரைப்படி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய ராணுவ செவிலியர் சேவை பிரிவு பணிக்கான எழுத்து தேர்வை எழுதி அதில் தேர்வானார். பின்னர் அடுத்தடுத்து தேர்வுகள் எழுதி பதவி உயர்வு பெற்று வந்தார். தற்போது செவிலியர் பிரிவில் முதன்மை இடமான மேஜர் ஜெனரல் பதவி உயர்வை பெற்றுள்ளார்.

இதனை அவரது குடும்பத்தினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நாட்டுக்கு சேவையாற்றிய குடும்பம் இதுபற்றி இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் சகோதரர்கள் அந்தோணி சாமி, ஜான் பிரிட்டோ ஆகியோர் கூறியதாவது,
இந்திய நாட்டிற்காக நாங்கள் பணியாற்றியதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அதிலும் எங்களது சகோதரி இக்னேசியஸ் டெலோஸ் புளோரா தமிழகத்தின் முதல் பெண் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் சேவை செய்யும் பாக்கியம் எங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கிடைத்தது மிகவும் சந்தோசமாகவும், மன நிறைவாகவும் உள்ளது. இக்னேசியஸ் டெலோஸ் புளோரா சிறுவயதில் இருந்தே உதவும் மனப்பான்மை உடையவள். படிக்கும் காலத்தில் விளையாட்டிலும் சரி, கல்வியிலும் சரி சிறந்து விளங்கினார் எனக் கூறினர்.

இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் கணவர் இக்னேசியஸ் ஜான். இவர் ஓய்வு பெற்ற பேராசிரியர். இவர்களுக்கு மைக்கேல் ஜெகன், ஜெசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Army
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் ஸ்திரத்தன்மைக்குத் தேசிய ஜனநாயக கூட்டணி உந்துசக்தியாக இருக்கிறது : பிரதமர் மோடி  பெருமிதம்

Next Post

நீங்க நடந்துக்கிறதைப் பொறுத்தே நட்பு: பாகிஸ்தானுக்கு அரிந்தம் பாக்சி பதிலடி!

Related News

கொடி நாள் நிதிக்குத் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும்! – பிரதமர் மோடி

கொடி நாள் நிதிக்குத் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும்! – பிரதமர் மோடி

சிக்கிம் டீஸ்டா ஆற்றில் 2-வது பாலம் அமைத்த ராணுவம்!

சிக்கிம் டீஸ்டா ஆற்றில் 2-வது பாலம் அமைத்த ராணுவம்!

நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: 29 இராணுவ வீரர்கள் பலி!

நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: 29 இராணுவ வீரர்கள் பலி!

யோகா பயிற்றுநர்களாக மாறிய இராணுவ வீரர்கள்!

யோகா பயிற்றுநர்களாக மாறிய இராணுவ வீரர்கள்!

முப்படைகளின் தளபதிகளுக்கு அதிகாரமளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.

முப்படைகளின் தளபதிகளுக்கு அதிகாரமளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

செங்கல்பட்டு சரக்கு இரயில் விபத்து – காரணம் இதுதான்!

செங்கல்பட்டு சரக்கு இரயில் விபத்து – காரணம் இதுதான்!

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம்- பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம்- பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்: ஹமாஸ் மிரட்டல்!

பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்: ஹமாஸ் மிரட்டல்!

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை!

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை!

தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!

தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்! – பிரதமர் மோடி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்! – பிரதமர் மோடி

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா!

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies