மேட்டூர் அணையில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
Monday, December 11 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேட்டூர் அணையில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

Web Desk by Web Desk
Jul 26, 2023, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 48,025 கனஅடியாக அதிகரிப்பு .இதனால் அணையின் நீர் அளவு வினாடிக்கு 119 கன அடியிலிருந்து வினாடிக்கு 177 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து காவிரியில் திறக்கப்பட்ட உபரிநீர் நேற்று பிலுகுண்டு பகுதியை வந்தடைந்தது. அப்போது வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து 3 ஆயிரம் கன அடியானது. தொடர்ந்து பிலிகுண்டு பகுதிக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 100 அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வந்தடைந்து அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கலில் பரிசல் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் மற்றும் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் , மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தெங்குமரஹாடா உள்ளிட்ட மலைக் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயிர் சாகுபடியை கருத்தில் கொண்டு இன்று காலை நீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் நேற்று காலை 66.86 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 65.80 அடியாக குறைந்தது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

மேற்கு திசைச் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி,திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர்,காஞ்சிபுரம் , திருவண்ணாமலை, சென்னை , செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று (ஜூலை 26) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூலை 26,  நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் . தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம்.

Tags: metturdamdeltarainnewsweatherreportweather
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறை இயக்குநர் பணியை நீட்டிக்க வேண்டும்- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்

Next Post

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் போட்டியிடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு…

Related News

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

மேட்டூர் அணை: நீர்மட்டம் 64.20 அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை: நீர்மட்டம் 64.20 அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை: நீர்மட்டம் 63.83 அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை: நீர்மட்டம் 63.83 அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை: நீர்மட்டம் 61.51 அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை: நீர்மட்டம் 61.51 அடியாக அதிகரிப்பு

வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது மிதிலி புயல்!

வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது மிதிலி புயல்!

மேட்டூர் அணை: நீர்மட்டம் 61.08 அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணை: நீர்மட்டம் 61.08 அடியாக அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மிக்ஜாம் புயல்: சக்தி மசாலா ரூ.1 கோடி நன்கொடை!

மிக்ஜாம் புயல்: சக்தி மசாலா ரூ.1 கோடி நன்கொடை!

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

செங்கல்பட்டு சரக்கு இரயில் விபத்து – காரணம் இதுதான்!

செங்கல்பட்டு சரக்கு இரயில் விபத்து – காரணம் இதுதான்!

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம்- பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம்- பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்: ஹமாஸ் மிரட்டல்!

பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்: ஹமாஸ் மிரட்டல்!

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை!

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை!

தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!

தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்! – பிரதமர் மோடி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்! – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies